ஆதிகாலத்தில் வாஸ்து சாஸ்திரத்தை ‘வாஸ்து வித்யா’ என்று தான் அழைத்து உள்ளனர். அதாவது வரை படங்கள் எதுவும் இல்லாமலேயே திசைகளையும், மனக் கணக்குளை மட்டுமே வைத்து பண்டைய காலங்களில் மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும், ஆலயங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் சந்தைகள், பொது இடங்களை வாஸ்து சாஸ்திர முறைப்படி வடிவமைத்து வாழ்ந்து உள்ளனர்.
வாஸ்து சாஸ்திரப்படி எந்த திசை என்பதை விட எல்லாம் எதை எங்கே வைக்கிறோம் என்பதை தான் வாஸ்து சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அதில் மட்டுமே மிக அதீத கவனம் கொள்ள வேண்டும்.
சதுரம் அல்லது செவ்வக வடிவம் அடிப்படையில் இவ்வடிவங்கள் மட்டுமே ஆற்றல் ஓட்டம் கொண்டவையாகவும், நேர்மறை ஆற்றல்களை மேம்படுத்தும் சக்தி கொண்டவையாகவும் அமைகின்றன.
சதுர அமைப்பு கொண்ட வீடுகளை ஐந்து பாகங்களாக பிரித்தல் வேண்டும். அதில் நான்கு தனித் தனி பாகங்களோடு ஒரு மத்திய பாகம் (பிரமாந்த்) என்று அமையும். ஒவ்வொரு பாகமும் தனித் தனி ஆற்றலோடு பல சிறப்பம்சங்கள் பொருந்த அமைவது தான் இந்த வகை வடிவமைப்பின் ஆதார அனுகூலம் ஆகும்.
வணக்கத்துக்கு உரிய வட-கிழக்கு திசை
வட திசை எப்போதும் நீர் தன்மை கொண்ட திசையாக கருதப்படுகிறது. வட கிழக்கு திசையும் அத்தகைய தன்மை கொண்டவை தான்.
வட கிழக்கு மற்றும் கிழக்கு தான் நுழைவு வாயிலுக்கு பொருந்தக் கூடிய திசை ஆகும். மேலும் வீட்டின் பிரதான ஹால் மற்றும் குளியல் அறை (கழிவு அறை அல்ல).
மேலும் பூஜை அறைக்கும் வட கிழக்கு திசை ஏற்றதாக வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. வட கிழக்கு திசையை வணக்கத்துக்குரிய திசையாக கருதலாம். ஆம் பூஜை அறைக்கு உரிய அனுகூலமான திசை ஆகும். மேலும் தியான அறையாகவும் கூட சிலர் பயன்படுத்திக் கொள்ள முடியும். அவரவர் வழிபாட்டு முறைகளுக்கு ஏற்ப இந்த வட-கிழக்கு திசையில் ஆன்மீக அறையை அமைத்து அமைதியான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளலாம்.