• ஒவ்வொரு வீட்டிலும் பிரதான கதவின் முன்பு ஒரு பெயர் பலகை இருக்க வேண்டும். வடமேற்கு திசை பார்த்த பிரதான நுழைவாயில் உள்ள வீடுகளின் கதவுக்கு உலோகத்தாலான பெயர் பலகை சிறந்தது. மற்றபடி நுழைவு வாயிலுக்கு முன்னால் மரத்திலான பெயர் பலகை வைக்கலாம்.
• பிரதான வாசலை ஓம், ஸ்வஸ்திக், சிலுவை போன்ற தெய்வீக சின்னங்களால் அலங்கரித்து, தரையில் அழகான கோலங்களை இடுங்கள். ஏனெனில், இவை அதிர்ஷ்டம் கொடுக்கும் மங்களகரமான சின்னங்களாகும்.
• விநாயகர் மற்றும் லக்ஷ்மி சிலைகளை வைப்பதன் மூலம் பிரதான நுழைவாயில் பகுதியை அலங்கரிக்கலாம். இது, குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் செழிப்பை ஈர்க்கும்.
• நீர் மற்றும் மலர் இதழ்கள் நிரப்பப்பட்ட ஒரு உர்லி அல்லது கண்ணாடி பானையை வைத்து வீட்டின் நுழைவாயிலை அழகுபடுத்துங்கள்.
• பிரதான நுழைவாயிலைச் சுற்றியுள்ள பகுதி நன்கு வெளிச்சமாக ஜோதிர்மயமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான விளக்குகளை அங்கு பொருத்த வேண்டும் என்பது அவசியம்.
• வீட்டு நுழைவாயிலுக்கான பிரத்யேக வாஸ்து சாஸ்திரத்தின்படி, தீய விஷயங்களை விலக்கி வைக்கவும், எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வராமல் தடுக்கவும், நுழைவு வாயிலில் குதிரை குதிகாலின் கருப்பு நிற லாடத்தை மாட்டி வைக்கலாம்.
• வீட்டின் பிரதான கதவு அல்லது நுழைவாயிலில் வாசற்படி இருக்க வேண்டும். இது பளிங்கு அல்லது மரத்தாலான படிக்கட்டாக இருக்கலாம். ஏனெனில், இது எதிர்மறை அதிர்வுகளை உறிஞ்சி நேர்மறை ஆற்றலை மட்டுமே வீட்டினுள்ளே செல்ல அனுமதிக்கிறது என்பது வாஸ்து சாஸ்திர ஐதீகம்.
• மேலும், அழுக்கு மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் மிதியடிகளை வைக்கவும். ஏனெனில், வீட்டிற்கு வருபவர்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு தங்கள் காலணிகளை சுத்தம் செய்ய மிதியடிகளைப் பயன்படுத்துவார்கள்.
• மணி பிளான்ட் அல்லது துளசி செடி போன்ற மங்களகரமான செடிகளை வீட்டின் முன் வாசல் அருகே வைக்கவும்.