துளசி செடியை அதற்கு ஏதுவான திசையில் வைத்து வளர்ப்பதற்கு வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கும் வழிகாட்டுதல்கள்.
துளசி செடியை வைப்பதற்கு ஏற்ற திசை கிழக்கு திசையே. இருப்பினும் அதை பால்கனி அல்லது வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் உள்ள ஜன்னல் அருகேயும் வைக்கலாம். வாஸ்து சாஸ்திரத்தின்படி வடக்கு திசை என்பது நீரின் திசையாகும். இந்த திசையில் துளசி செடியை வைத்து வளர்ப்பதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை வரவழைத்து, எதிர்மறை ஆற்றல்களை விலக்கி வீட்டில் நல்லச் சூழலை உருவாக்க உதவுகிறது.
• துளசி செடி இருக்கும் இடத்தில் போதுமான அளவுக்கு சூரிய ஒளி இருக்க வேண்டும்.
• துளசி செடியை எப்பொழுதும் ஒற்றைப்படையில் வைப்பது நல்லது உதாரணத்திற்கு ஒன்று, மூன்று அல்லது ஐந்து.
• துளசி செடியின் அருகே துடைப்பம், காலணிகள் அல்லது குப்பை தொட்டிகள் போன்றவற்றை வைக்காமல் இருப்பது நல்லது.
• துளசி செடியை சுற்றியுள்ள இடம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
• துளசி செடி அருகில் பூச்செடிகளை வைப்பது நல்லது.
• வீட்டில் காய்ந்து போன செடியை வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை உருவாக்கும்.
தவிர்க்க வேண்டிய துளசி செடி வாஸ்து திசை:
துளசி செடியை வீட்டில் வைத்து வளர்க்க வேண்டுமெனில், வாஸ்துவில் பரிந்துரைக்கப்பட்ட திசைகளான வடக்கு அல்லது வடகிழக்கில் மட்டுமே அச்செடியை வைத்து வளர்க்க வேண்டும். வாஸ்து சாஸ்திரப்படி நெருப்பு அல்லது அக்னி தேவனின் இருப்பிடமான தென்கிழக்கு திசையில் துளசி செடியை வளர்க்கக் கூடாது.