வாஸ்து சாஸ்திரம் தொடர்பான சேவைகளில் கவனம் செலுத்தும் நிறுவனமாக எங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.
ஓம் வாஸ்துபவ (OM VASTHUBAVA) ஒரு தொழில்முறை வாஸ்து நிபுணரான திரு.தேவராஜன் ராமானுஜம்  தலைமையிலான ஒரு அமைப்பு, வாஸ்து சாஸ்திரத்தின் வளர்ச்சியில் முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்று நமது வேத கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மற்றும் புதுச்சேரியை  சுற்றியுள்ள பகுதிகளில் மிக  சிறந்த வாஸ்து சாஸ்திர ஆலோசனைகளை எங்கள் நிறுவனமான ஓம் வாஸ்து வழங்கி வருகின்றது. வாஸ்து சாஸ்திரம் என்பது  பிரபஞ்சம் என்று சொல்லப்படும் நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும்  ஆகாயம் ஆகிய 5(பஞ்சபூதங்கள் ) இயற்கை கூறுகளை உள்ளடக்கிய கட்டமைப்பின் அறிவியலாகும்.

வாஸ்து சாஸ்திர நடைமுறைகளை வைத்து கட்டிடத்தின் எந்தப் பகுதியையும் இடித்தோ / இடிக்காமலோ  ஆற்றல் மட்டத்தை மாற்றுவதன் மூலம் வாஸ்து குறைபாடுகளை அகற்றி உங்களின் வாழ்வில் செல்வம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை உறுதிசெய்கிறோம். தங்களின் இடத்தை நேரில் ஆய்வு செய்தும், கட்டிட வரை படத்திலும், வாஸ்து படி சரியான முறையில் அமைப்பதற்கான வழிகளை காண்பித்து அதன்படி அமைத்த பின் மீண்டும் ஆய்வு செய்து அவர்களின் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டி உள்ளோம். வாஸ்துவின் மூலம் எங்களிடம் ஏராளமான வாடிக்கையாளர்கள் பயன் பெற்று சந்தோஷமாக இருக்கின்றார்கள்.

தாங்களும் எங்களின் சேவையை பயன்படுத்தி வாழ்க்கையில் சந்தோஷத்தையும் வளத்தையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழ வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்.

error: Content is protected !!
Scroll to Top