Author name: OMVASTHUBAVA

வாஸ்துவில் பார்க்கப்படும் எட்டு திசைகளும் அதன் பலன்களும்!!

கிழக்கு –  சூரியன் உதிக்கும் திசை, பூமியானது இத்திசை நோக்கியே சுழல்கின்றது சூரியனின் ஆற்றீல் அறிந்த நமது முன்னோர்கள் இத்திசை  “சூரிய நமஸ்காரம்” செய்தனர். இந்த திசை இந்திர பகவானுக்கு உரிய திசையாகும். மேற்கு – சூரியன் மறையும் திசை, பூமி சுற்றும் திசைக்கு எதிர்ப்புறம், இந்த திசைக்கு உரிய பாலகர் வருண பகவான் ஆகும். வடக்கு – சூரியன் உதிக்கும் திசை நோக்கி நாம் இருக்கும்போது நமக்கு இடப்புறம் உள்ள திசையாகும். இந்த திசைக்கு உரிய பாலகர் குபேர  ஆவார். வாஸ்து சாஸ்திரத்தில் இது மிக முக்கியமானது திசையாக கருதப்படுகின்றது. தெற்கு – சூரியன் உதிக்கும் திசைக்கு வலது புறம் உள்ள திசை, இந்த திசைக்கு உரிய பாலகர் “எமன்” ஆவார். வாஸ்து சாஸ்திரத்தில் இந்த  பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பல விவரங்கள் கூறபட்டடுள்ளது. வடகிழக்கு – வடக்கும், கிழக்கும் சேரக்கூடிய திசை வடகிழக்கு திசையாகும். இது வாஸ்து சாஸ்திரத்தில் மிக இன்றிமையாத, ஈசனுக்கு உரிய  தெய்வ சக்தி உடையது. பாலகர், ஈசான்கள். இந்த திசை சரியாக ஒர் இல்லத்தில் அமைந்தால் அனைத்து நலன்களூம் குறைவில்லாமல்  கிடைக்கும். தென்கிழக்கு – தெற்கும் கிழக்கும் சேரும் பகுதி – தென்கிழக்கு திசையாகும், அக்னிக்கும் உரியது பாலகர். அக்னிக்கு உரியது பாலகர்.  அக்னிபகவான் விட்டில் பெண்கள் நலம், வம்பு, வழக்கு, புகழ், வரவுக்கு அதிகமான செலவு, பகைவரால் தொல்லை முதலியவைகள் இந்த  பகுதி அமையும் விதத்தை பொருத்தே அமைகின்றது. வடமேற்கு – வடக்கும் மேற்கும் சேரும் பகுதி வடமேற்கு வாயுப்பகுதி, பாலவர், வாயு பாகவான். பெண்களின் நலன், திருமண வாழ்க்கை, குணம், நடத்தை, குடும்பத்தின் ஒற்றுமை, செல்வத்தின் அமைப்பு, வழக்கு விவகாரங்கள், புகழ் அரசியல் செல்வாக்கு முதலியவை இந்த  திசையை வைத்தே அமைகின்றது. தென்மேற்கு – தெற்கும் மேற்கும் சந்திக்கும் இடம் தென்மேற்க்கு என்று அழைக்கப்பகிறது. நைருதிக்கு உரியது இந்த மூலை. “நைருதிமூலை”  என்று அழைக்கப்படுகிறது. ஈசனிய மூலைக்கு நேர் எதிர் மூலை இது. ஈசான்யம் ஜனனம் என்றால் இது மரணம். ஈசான்யம் வரவு என்றால்  இது செலவு. எனவே ஈசான்யத்தைப் போல் இது முக்கியமான திசையாகும். இது “கன்னி மூலை” என்று அழைக்கப்படுகின்றது.

வாஸ்துவில் பார்க்கப்படும் எட்டு திசைகளும் அதன் பலன்களும்!! Read More »

மேற்கு பார்த்த மனைகளில் வீடு கட்டும்போது பின்பற்ற வேண்டியவைகள்!!

வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த மனைகள் மட்டுமே வாஸ்து அமைப்பில் நல்ல மனைகள் மற்ற திசைகளை பார்த்த மனைகள் கொஞ்சம் பலன் குறைந்த மனைகள் என்று நினைக்கின்றனர். மேற்கு பார்த்த மனைகளில் இல்லங்கள் அமைக்கும்போது வாஸ்து விதிகளையும், பழந்தமிழர் மனைபடி சாஸ்திரமான ஆயாதி பொருத்த அமைப்பை உட்புகுத்தி கட்டும் போது அற்புதமான வாழ்க்கை வாழமுடியும். மேற்கு பார்த்த மனைகளை கட்டும்போது வருண பகவான் தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறார். எனவே அத்திசையின் கடவுளை அனுசரித்து வீட்டை அமைக்கும் போது மழையை எப்படி வருணபகவான் வழங்குகிறாரோ அதுபோல அனைத்து போகங்களும் கிடைக்கும்  வீடாக இருக்கும். வாஸ்து அமைப்பில் மேற்கு பார்த்த மனைகளை தேர்ந்தெடுக்கும்போது மனையில் இருந்து நீங்கள் சாலைக்கு இறங்கும்போது, மேற்கு புறம் இறங்கி வடக்கு மட்டுமே ப்யணாப்பட வேண்டும். அப்படி சாலைகள் இல்லையென்றால் அந்த மனையை தவிர்க்க வேண்டும். இந்த மனைகளை வீடு கட்ட உபயோகிக்கும் போது வடக்கு மற்றும் கிழக்கு அதிக இடங்கள் இருக்கும் அமைப்பினை ஏற்படுத்தி வீடு கட்ட வேண்டும். அப்படி கட்டகூடிய கட்டிடம் தென்கிழக்கும் வடமேற்கும் இடத்தின் தரை அமைப்பில் உடைபடாது கட்ட வேண்டும். மேற்கு பார்த்த மனைகளில் வாஸ்து சாஸ்திர விதிகளை பின்பற்றி வீடு கட்டும் போது நல்ல பலன்களை கிழக்கு பார்த்த மனைகளை விட அற்புதமான ஐஸ்வரியங்களை வழங்கும் மனையாக இருக்கும். இதற்கு காரணம் மேற்கு பாகத்தில் ஒரு பகுதியை சனிபகவான் ஆட்சி  செய்கிறார்கள். மேற்கு பார்த்த இடங்களை வாஸ்து மற்றும் ஆயாதி மற்றும் ஜோதிட அமைப்பின் படி சரியான முறையில் சாஸ்திரத்தில் உள்ள விதிகளை  பின்பற்றி அமைக்கும் போது மேற்கு பார்த்த மனைகளும் நல்ல பலன்களை தரும்.

மேற்கு பார்த்த மனைகளில் வீடு கட்டும்போது பின்பற்ற வேண்டியவைகள்!! Read More »

தெருக்குத்து தோஷம் மற்றும் அதற்கான பரிகாரம்

வீடு என்பது மனிதர்கள் அனைவரும் வசிப்பதற்கு மிகவும் அவசியமாகும். இந்த வீடுகள் பெரும்பாலும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தான் பெரும்பான்மையானவர்களுக்கு அமைகிறது. அதிலும் வீட்டை சுற்றி சாலைகள், தெருக்கள் போன்றவை இருப்பது ஆச்சர்யமொன்றும் இல்லை. ஆனால் இந்த சாலைகள், வீதிகள் அல்லது தெருக்கள் போன்றவையின் தொடக்கமானதோ அல்லது முடிவோ நம் வீட்டின் தலைவாயிலுக்கு நேரெதிரே இருந்தால் அது “தெருக்குத்து” என்றழைக்கப்படுகிறது. அதனால் ஏற்படும் வாஸ்து குறைபாடு பற்றியும் அதை போக்குவதற்கான பரிகாரம் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம். வீதி சூலை மற்றும் தெருக்குத்து தோஷங்கள் பல வகைகளாக இருக்கின்றன. இந்த தெருக்குத்து என்றால் என்பதை மேலே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். கிழக்கு மற்றும் தெற்கு திசைகளில் தலை வாயில்கள் கொண்ட வீட்டின் தலைவாயிலுக்கு நேரெதிரே வீதி அல்லது தெருவின் தொடக்கமோ அல்லது முடிவோ இருந்து ஏற்படும் தெருக்குத்து தோஷத்தால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு தொடக்க காலத்தில் எந்த ஒரு பிரச்சனைகள் இருக்காது என்றாலும் காலப்போக்கில் பொருளாதார நெருக்கடிகள், துயரங்கள் போன்றவற்றை சந்திக்க நேரிடும். மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் தலைவாயில்கள் கொண்ட வீட்டின் தலைவாயில்களுக்கு நேரெதிரே வீதி அல்லது தெருவின் தொடக்கமோ அல்லது முடிவோ இருந்து ஏற்படும் தெருக்குத்து தோஷத்தால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நிலையில்லாத வாழ்க்கை, சில நாட்கள் இன்பம், சில நாட்கள் துன்பம் என ஏற்ற இறக்கமான பலன்களே ஏற்படும். பொதுவாக எந்த திசையில் வீடு இருந்து, அந்த வீட்டின் தலைவாயில்களின் நேரெதிரே தெருவோ அல்லது வீதியின் தடக்கமோ முடிவோ இருப்பதால் ஏற்படும் வீதி சூலை மற்றும் தெருக்குத்து தோஷத்தால் வீட்டில் வசிக்கும் எதிர்கால சந்ததியினரின் வாழ்வில் பல இன்னல்கள் உண்டாகும். குடும்ப பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையே அதிகம் இருக்கும். பலரும் தாங்கள் வசிக்கும் சொந்த மற்றும் வாடகை வீடுகளில் இத்தகைய தெருக்குத்து தோஷம் இருக்கவே செய்கிறது. இந்த தோஷத்தை நீக்குவதற்கு ஒரு செப்பு தகட்டில் மந்திரக்கப்பட்டு வரையப்பட்ட சுதர்சன யந்திரத்தை பிரேம் போட்டு தெருவை பார்த்தவாறு இருக்கும் உங்கள் வீட்டின் தலைவாயிலுக்கு மேல் மாட்டிவைப்பதால் தெருக்குத்து தோஷத்தை போக்கும்.

தெருக்குத்து தோஷம் மற்றும் அதற்கான பரிகாரம் Read More »

துளசி மாடம் வைக்கும் திசை: உங்கள் வீட்டுக்கான துளசி செடி வாஸ்து சாஸ்திர குறிப்புகள்

துளசி செடியை அதற்கு ஏதுவான திசையில் வைத்து வளர்ப்பதற்கு வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கும் வழிகாட்டுதல்கள். துளசி செடியை வைப்பதற்கு ஏற்ற திசை கிழக்கு திசையே. இருப்பினும் அதை பால்கனி அல்லது வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் உள்ள ஜன்னல் அருகேயும் வைக்கலாம். வாஸ்து சாஸ்திரத்தின்படி வடக்கு திசை என்பது நீரின் திசையாகும். இந்த திசையில் துளசி செடியை வைத்து வளர்ப்பதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை வரவழைத்து, எதிர்மறை ஆற்றல்களை விலக்கி வீட்டில் நல்லச் சூழலை உருவாக்க உதவுகிறது. • துளசி செடி இருக்கும் இடத்தில் போதுமான அளவுக்கு சூரிய ஒளி இருக்க வேண்டும். • துளசி செடியை எப்பொழுதும் ஒற்றைப்படையில் வைப்பது நல்லது உதாரணத்திற்கு ஒன்று, மூன்று அல்லது ஐந்து. • துளசி செடியின் அருகே துடைப்பம், காலணிகள் அல்லது குப்பை தொட்டிகள் போன்றவற்றை வைக்காமல் இருப்பது நல்லது. • துளசி செடியை சுற்றியுள்ள இடம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். • துளசி செடி அருகில் பூச்செடிகளை வைப்பது நல்லது. • வீட்டில் காய்ந்து போன செடியை வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை உருவாக்கும். தவிர்க்க வேண்டிய துளசி செடி வாஸ்து திசை: துளசி செடியை வீட்டில் வைத்து வளர்க்க வேண்டுமெனில், வாஸ்துவில் பரிந்துரைக்கப்பட்ட திசைகளான வடக்கு அல்லது வடகிழக்கில் மட்டுமே அச்செடியை வைத்து வளர்க்க வேண்டும். வாஸ்து சாஸ்திரப்படி நெருப்பு அல்லது அக்னி தேவனின் இருப்பிடமான தென்கிழக்கு திசையில் துளசி செடியை வளர்க்கக் கூடாது.

துளசி மாடம் வைக்கும் திசை: உங்கள் வீட்டுக்கான துளசி செடி வாஸ்து சாஸ்திர குறிப்புகள் Read More »

பிரதான கதவு முன்பு தவிர்க்க வேண்டியவை

• ஒரு சுத்தமான வீடு, குறிப்பாக பிரதான நுழைவாயில் நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் ஈர்ப்பதாகும். காலணி அலமாரிகள், பழைய ஃபர்னிச்சர்கள், குப்பைத் தொட்டிகள், உடைந்த நாற்காலிகள் அல்லது ஸ்டூல்களை பிரதான கதவுக்கு அருகில் வைப்பதைத் தவிர்க்கவும். • பிரதான கதவின் முன் ஒருபோதும் கண்ணாடியை வைக்க வேண்டாம். இது வீட்டிற்குள் நுழையக்கூடிய ஆற்றலை பிரதிபலித்து வெளியேற்றி விடும். • கருப்பு நிறங்களைக் கொண்ட எந்த ஓவியம் அல்லது கலைப்படைப்பையும் பிரதான நுழைவாயிலில் வைக்க வேண்டாம். • பிரதான நுழைவாயிலுக்கு விளக்குகளை வைக்கும்போது, சிவப்பு வண்ண விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

பிரதான கதவு முன்பு தவிர்க்க வேண்டியவை Read More »

வீட்டு நுழைவு வாயில் : பிரதான கதவுக்கான சிறந்த திசைகள்

சிறந்த திசையை நோக்கி உங்கள் பிரதான கதவை வைக்க, மேலே உள்ள படத்தைப் காணவும். 1 என்பது சிறந்த நிலையைக் குறிக்கிறது, மற்றவை படத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சில திசைகள் மற்றவற்றவற்றை விட ஏன் சிறந்தவை என்பது பற்றி இங்கே: • வடகிழக்கு: படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போல, உங்கள் பிரதான கதவை வைக்க, வடகிழக்கு மிகவும் சிறந்த மங்களகரமானது. காலையில் சூரிய ஒளிக்கு வெளிப்படுத்தப்படுவதால் அபரிமிதமான ஆற்றலைப் பெறும் திசை இதுவே. இது வீட்டிற்கும் அதில் குடியிருப்பவர்களுக்கும் குடிமக்களுக்கும் மிக்க வலிமையையும் ஆற்றலையும் அளிக்கிறது. • வடக்கு: இந்த இடம் குடும்பத்திற்கு செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது, எனவே உங்கள் வீட்டின் பிரதான கதவு அல்லது நுழைவாயிலை வைக்க இது இரண்டாவது சிறந்த திசையாகும். • கிழக்கு: வீட்டின் பிரதான கதவை வைக்க இது மிகவும் உகந்த இடம் இல்லை என்றாலும் கிழக்குத் திசை உங்கள் சக்தியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அது கொண்டாட்டத்தை அதிகரிக்கிறது. • தென்கிழக்கு: தென்மேற்கு திசையில் ஒரு போதும் நுழைவாயிலை வைக்காதீர்கள். வேறு வழியே இல்லை என்றால், வாஸ்துவில் பரிந்துரைக்கப்பட்ட தென்கிழக்கு திசை நுழைவாயிலைத்தான் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். • வடமேற்கு: வேறு வழியில்லை என்றால், வடக்கு திசையில்தான் நுழைவாயிலை வைக்க வேண்டியதிருந்தால், அது வடமேற்கு திசையில் நுழைவுவாயிலாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வாஸ்து படி, மாலை சூரியக்கதிர்களின் பலன்கள் மற்றும் செழிப்பை இந்த வழியில் வரவேற்கும் வகையில் இது அமையும்

வீட்டு நுழைவு வாயில் : பிரதான கதவுக்கான சிறந்த திசைகள் Read More »

பிரதான கதவின் முன்பு வேண்டிய பொருட்கள்

• ஒவ்வொரு வீட்டிலும் பிரதான கதவின் முன்பு ஒரு பெயர் பலகை இருக்க வேண்டும். வடமேற்கு திசை பார்த்த பிரதான நுழைவாயில் உள்ள வீடுகளின் கதவுக்கு உலோகத்தாலான பெயர் பலகை சிறந்தது. மற்றபடி நுழைவு வாயிலுக்கு முன்னால் மரத்திலான பெயர் பலகை வைக்கலாம். • பிரதான வாசலை ஓம், ஸ்வஸ்திக், சிலுவை போன்ற தெய்வீக சின்னங்களால் அலங்கரித்து, தரையில் அழகான கோலங்களை இடுங்கள். ஏனெனில், இவை அதிர்ஷ்டம் கொடுக்கும் மங்களகரமான சின்னங்களாகும். • விநாயகர் மற்றும் லக்‌ஷ்மி சிலைகளை வைப்பதன் மூலம் பிரதான நுழைவாயில் பகுதியை அலங்கரிக்கலாம். இது, குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் செழிப்பை ஈர்க்கும். • நீர் மற்றும் மலர் இதழ்கள் நிரப்பப்பட்ட ஒரு உர்லி அல்லது கண்ணாடி பானையை வைத்து வீட்டின் நுழைவாயிலை அழகுபடுத்துங்கள். • பிரதான நுழைவாயிலைச் சுற்றியுள்ள பகுதி நன்கு வெளிச்சமாக ஜோதிர்மயமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான விளக்குகளை அங்கு பொருத்த வேண்டும் என்பது அவசியம். • வீட்டு நுழைவாயிலுக்கான பிரத்யேக வாஸ்து சாஸ்திரத்தின்படி, தீய விஷயங்களை விலக்கி வைக்கவும், எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வராமல் தடுக்கவும், நுழைவு வாயிலில் குதிரை குதிகாலின் கருப்பு நிற லாடத்தை மாட்டி வைக்கலாம். • வீட்டின் பிரதான கதவு அல்லது நுழைவாயிலில் வாசற்படி இருக்க வேண்டும். இது பளிங்கு அல்லது மரத்தாலான படிக்கட்டாக இருக்கலாம். ஏனெனில், இது எதிர்மறை அதிர்வுகளை உறிஞ்சி நேர்மறை ஆற்றலை மட்டுமே வீட்டினுள்ளே செல்ல அனுமதிக்கிறது என்பது வாஸ்து சாஸ்திர ஐதீகம். • மேலும், அழுக்கு மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் மிதியடிகளை வைக்கவும். ஏனெனில், வீட்டிற்கு வருபவர்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு தங்கள் காலணிகளை சுத்தம் செய்ய மிதியடிகளைப் பயன்படுத்துவார்கள். • மணி பிளான்ட் அல்லது துளசி செடி போன்ற மங்களகரமான செடிகளை வீட்டின் முன் வாசல் அருகே வைக்கவும்.

பிரதான கதவின் முன்பு வேண்டிய பொருட்கள் Read More »

வாஸ்து தோஷம்

பொதுவாக ஒரு வீட்டில் வடகிழக்கு மூலையில் பசுமையான நிறத்தில் உள்ள படங்களோ அல்லது ஒரு சிறிய தொட்டியில் செடி போன்றவை வைத்தாலே வாஸ்து பிரச்சனைகள் சரியாகி விடும் என்பது ஐதீகம். அது மட்டுமின்றி தேவகனி என்று சொல்லப்படும் எலுமிச்சை மரத்தை வீட்டில் நட்டு வளர்க்கும் போது எந்தவிதமான வாஸ்து பிரச்சனைகளும் வராமல் தடுக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போதும் இந்த வாஸ்துவுக்கு நாம் பரிகாரம் செய்ய தேவையான பொருள் எலுமிச்சை பழம் தான். ஏழு எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டின் நான்கு மூலையிலும் ஏழு எலுமிச்சை பழத்தையும் ஒவ்வொன்றாக சுற்ற வேண்டும். அப்படி பார்க்கும் போது ஒவ்வொரு மூலையிலும் நாம் ஏழு முறை எலுமிச்சை பழத்தை வைத்து சுற்றுவோம். அதன் பிறகு இந்த எலுமிச்சை பழங்கள் அனைத்தையும் வீட்டிற்கு வெளியில் கொண்டு வந்து அதை இரண்டு பாதியாக நறுக்க வேண்டும். இப்படி நறுக்கிய இந்த எலுமிச்சை பழ துண்டுகளை வீட்டிற்கு வெளியே சென்று சமமாக பிரித்து நான்கு மூலையிலும் தூக்கி எறிந்து விடுங்கள். அதன் பிறகு உங்கள் கை கால்களை சுத்தம் செய்து கொண்டு வீட்டிற்குள் வந்து விடுங்கள். இந்த பரிகாரத்தை ஒரு முறை செய்தாலே போதும். இதே போல் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஒரே ஒரு எலுமிச்சை பழத்தை மட்டும் எடுத்து பாதியாக அரிந்து அதன் சாறை மட்டும் நான்கு மூலைகளில் லேசாக பிழிந்து விட்டு, அந்த எலுமிச்சை பழத்தை வெளியில் தூக்கி போட்டு விடுங்கள். இதை வாரம் வாரம் சனிக்கிழமை செய்து வரலாம். இப்படி செய்யும் பொழுது வீட்டில் வாஸ்து சம்பந்தமான எந்த குறைபாடும் வரவே வராது. அது மட்டும் இன்றி வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் கூட இதன் மூலம் சரியாகி விடும் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாகவே எலுமிச்சை பழத்துக்கு தீயவை எடுத்துக் கொண்டு நல்லவற்றை நமக்கு கொடுக்கக்கூடிய ஆற்றல் உண்டு. அதனால் தான் அது கனிகளிலேயே மிகவும் அற்புதமான பலனை பெற்று இருக்கிறது. முன் காலங்களில் எல்லாம் பெரும்பாலும் அனைவர் வீட்டிலிம் இந்த எலுமிச்சை மரம் நட்டு வைத்திருந்தார்கள் அவர்கள் இந்த வாஸ்து குறித்து வைத்திருந்தார்களா என்று தெரியாது ஆனால் அந்த பிரச்சனைகள் அவர்களுக்கு வராமல் இருக்க இவையெல்லாம் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

வாஸ்து தோஷம் Read More »

புதிதாக வீடு கட்டுபவர்கள் படிக்கட்டு மற்றும் முதல் தூண் அமைக்கும் முறை

முதல் படிக்கட்டில் விநாயகரை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். முதல் படிக்கட்டில் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து மஞ்சளால் பிள்ளையார் சுழி போட்டு கொள்ளுங்கள். அதற்கு கீழே லாபம் என்று எழுதிக் கொள்ளுங்கள். முதல் நான்கு படிகளுக்கும் இருபுறமும் பூக்களை வையுங்கள். இதை படி பூஜை என்பார்கள். இந்த பூஜையைச் செய்துவிட்டு ஒவ்வொரு படிக்கட்டாக உரிமையாளர் ஏறி செல்ல வேண்டும். இரண்டாவது படிக்கட்டில் பராசக்தியை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். திரிசூலம் வரைந்து ஓம் சக்தி என்கிற மந்திரத்தை குங்குமத்தால் எழுதுங்கள். மூன்றாவது படிக்கட்டில் ஈசனை நினைத்து விபூதியால் பட்டை தீட்டுங்கள். சிவாய நம என்ற மந்திரத்தை எழுதுங்கள். நான்காவது படிக்கட்டில் பெருமாளை நினைத்து கொள்ளுங்கள். திருநாமம் வரைந்து கொள்ளுங்கள். முதல் நான்கு படிக்கட்டுகளில் இவ்வாறு செய்து பின்னர் ஊதுபத்தி ஏற்றி வைத்து கற்பூர ஆரத்தி காண்பியுங்கள். அதன் பிறகு இவற்றை மிதிக்காமல் ஒவ்வொரு படியாக ஏறி மேலே செல்லுங்கள். இவ்வழியாக படி பூஜை உரிமையாளர் செய்யும் பொழுது வாழ்வில் இறக்கங்களை சந்திக்காமல் ஒவ்வொரு படியாக ஏறி கொண்டே செல்வார்கள் என்பது வழக்கம்.

புதிதாக வீடு கட்டுபவர்கள் படிக்கட்டு மற்றும் முதல் தூண் அமைக்கும் முறை Read More »

அஷ்டதிக் பாலகர்கள் யார்? இவர்களை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன?

அஷ்டதிக்கு பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர். இவர்கள் உயிர்களின் செயல்களுக்கு சாட்சியாக இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக ஐதீகம். அஷ்டம் என்ற சொல்லுக்கு ‘எட்டு’ என்று பொருள். எட்டு திசைகளுக்கு உரிய காவலர்களையே, ‘அஷ்டதிக்கு பாலகர்கள்’, ‘எண்திசை நாயகர்கள்’ என்று  அழைக்கிறோம். இந்திரன்: கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுபவர், இந்திரன். இவரே தேவர்கள் அனைவருக்கும் தலைவராக உள்ளார். இவரது மனைவி இந்திராணி. இவரே  அஷ்டதிக்கு பாலகர்களின் தலைவராகவும் இருக்கிறார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார்.  அக்னி தேவன்: தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுபவர். வேள்வியின்போது இடப்படும், நைவேத்தியப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இவருடைய மனைவியின் பெயர் சுவாகா தேவி. இவரை வழிபாடு செய்தால் தேக வனப்பு மற்றும் தேக பலம், மனஅமைதி,  குடும்ப மேன்மை கிடைக்கும். எமன்: தெற்கு திசையின் காவலராக இருப்பவர் எமதர்மன். இவர் தரும தேவன், காலதேவன், எமதர்மராஜா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். சூரிய பகவான்  மகனான இவர், தேவர்களுள் மிகவும் மதி நுட்பம் மிகுந்தவராக கருதப்படுகிறார். இவரது மனைவியின் பெயர் குபேர ஜாயை. இவரை வழிபாடு செய்தால் நம்மை  அண்டியிருக்கும் தீவினைகள் அனைத்தும் நீங்கி நல்வழி பிறக்கும். வருண பகவான்: மேற்கு திசையின் காவலராக இருப்பவர் வருணன். இவரை மழையின் கடவுள் என்று போற்றுகிறார்கள். இவரது மனைவியின் பெயர் வாருணி.  இவரை வழிபாடு செய்தால், தேவையான மழை கிடைத்து உணவு, பஞ்சம் நீங்கும். நிருதி: தென்மேற்கு திசையின் அதிபதியான நிருதி தேவனின், மனைவி பெயர் கட்கி. இவரை வழிபாடு செய்தால், எதிரிகளின் பயம் நீங்கும். வீரம் பிறக்கும். வாயு பகவான்: வடமேற்கு திசையின் காவலர் தான் இந்த வாயு பகவான். சிரஞ்சீவியும், இவரது மனைவியின் பெயர் வாயு ஜாயை.இவரை வழிபாடு செய்தால் ஆயுள் விருத்தி கூடும். குபேரன்: வடக்கு திசையின் அதிபதியானவர் குபேரன். இவர் செல்வத்திற்கும் அதிபதியாக இருக்கிறார். இவரது மனைவியின் பெயர் யட்சி என்பதாகும். இவரை  வழிபாடு செய்வதால், சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும். ஈசானன்: வடகிழக்குத் திசையின் அதிபதியான ஈசானன், மங்கலத்தின் வடிவமாக பாவிக்கப்படுகிறார். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்று ஈசானம் என்பது  குறிப்பிடத்தக்கது. ஈசானனின் மனைவி பெயர் ஈசான ஜாயை. இவரை வழிபாடு செய்வதன் மூலமாக ஞானத்தைப் பெற முடியும்.

அஷ்டதிக் பாலகர்கள் யார்? இவர்களை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன? Read More »

error: Content is protected !!
Scroll to Top