மனையடி சாஸ்திர நற்பலன்கள்
ஒரு அடி என்பது 12 அங்குலங்கள் உடையது ஆகும். சென்டி மீட்டர் கணக்கில் சொன்னால் 1 அடி என்பது 30 செ.மீ ஆகும். இந்த அடி கணக்குகள் ( 100 செ.மீ, 1 மீட்டர், 1000 மீட்டர், 1 கிலோ மீட்டர் ) 1950 – களில் தான் நடைமுறைக்கு வந்தது. 6 அடி: நன்மை தரக்கூடியது, இறைவன் அருள் கிடைக்கும் 7 அடி: தரித்திரம், வறுமை, கடன், நோய் போன்றன அதிகம் துன்புறுத்தும். 8 அடி: நல்ல பாக்கியம், செல்வம், தெய்வ அருள், இன்பம் அனைத்தும் கிடைக்கும். 9 அடி: கஷ்டங்களும் தோல்விகளும் நிறைந்தது. 10 அடி: சிறந்த உணவு, பொன் பொருள் சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும். 11 அடி: தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும், செழிப்பு நிறைந்த வாழ்க்கை அமையும். 12 அடி: புத்திரர் இழப்பு, வறுமை துர்மரணங்கள் நிறைந்தது. 13 அடி: நோய், துயரங்கள், தோல்விகள் நிறைந்தது. 14 அடி: பகை, கவலைகள் நிறைந்தது. 15 அடி: வறுமை, பணக்கஷ்டம், துன்பங்கள் நிறைந்தது. 16 அடி: மகிழ்ச்சி பொங்கும், செல்வம் செழிக்கும். 17 அடி: தொடங்கும் காரியம் வெற்றிகிடைக்கும், எதிரி கூட நண்பன் ஆவான். 18 அடி: திருடர்களால் பொருள் நஷ்டம், மன வேதனை, வீடு அழியக்கூடிய நிலைமை கூட ஏற்படும். 19 அடி: எப்போதும் மன வேதனை, புத்திரர்களால் கவலை, வறுமை இருக்கும். 20 அடி: தொழில் நல்ல வருமானம் கிடைக்கும், சொகுசான வாழ்க்கை அமையும் 21 அடி: தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும், எப்போதும் மகிழ்ச்சி இருக்கும். 22 அடி: சுயகௌரவம் பெருகும், பழி பாவங்கள் விலகும். 23 அடி: நிம்மதி அழியும், தடைகள் ஏற்படும், உறவினர்கள் கூட பகைவர் ஆவர். 24 அடி: தொடங்கிய காரியம் பாதியிலே நிற்கும், சேமிப்பு கரைந்து காலியாகி விடும். 25 அடி: இல்லறத்தில் பிரச்சனைகளும் கஷ்டங்களும் நிறைந்த வாழ்க்கை ஏற்படும். 26 அடி: இன்பங்களும் செல்வங்களும் நிறைந்த நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும். 27 அடி: பெயர், புகழ், பதவி அனைத்தும் கிடைக்கும். 28 அடி: தோல்விகள் விலகி வெற்றி கிடைக்கும், அனைவரும் நட்பு பாராட்டுவார்கள். 29 அடி: விவசாயம் பண்ணை தொழில் உயர்ந்து வாழ்க்கை வளம் பெறும். 30 அடி: அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும், பூர்வீக சொத்து கிடைக்கும், யோகம் உண்டாகும். 31 அடி: பொன் பொருள் சேர்க்கை கிடைக்கும், நல்லவர்கள் நண்பர்களாக கிடைப்பார்கள். 32 அடி: இதுவரை நீங்கள் இழந்தவை திரும்ப கிடைக்கும், எல்லோரையும் ஈர்த்து இழுக்கும் ஆற்றலும் கிடைக்கும். 33 அடி: வருமானம் அதிகரிக்கும், செல்வாக்கும் பெருகும். 34 அடி: இதுவரை சேர்த்து வைத்த பெயரும் புகழும் அழிந்து விடும், தீய பலன்களே நடக்கும். 35 அடி: செல்வ செழிப்பும் செல்வாக்கும் உயரும். 36 அடி: பதவி, புகழ் கிடைக்கும். வீரதீர செயல்களும் செய்வார்கள். 37 அடி: விவசாயம் மற்றும் பண்ணை தொழில் அதிகரிக்கும், வெற்றியும் கிடைக்கும். 38 அடி: எந்த காரியங்கள் தொடங்கினாலும் இடையூறுகளும் குழப்பங்களும் ஏற்படும். 39 அடி: இன்பம், செல்வம், குடும்பத்தில் அமைதியான வாழ்க்கையும் அமையும். 40 அடி: எந்த வேலை தொடங்கினாலும் இடைஞ்சலும் எதிர்ப்பும் அதிகரிக்கும். 41 அடி: பொன் பொருள் அதிகரிக்கும், தொழிலும் சிறப்பாக நடைபெறும். 42 அடி: வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைத்து மகிழ்ச்சியாக வாழலாம். 43 அடி: அனைத்திலும் ஏமாற்றமும் தடைகளுமே கிடைக்கும். 44 அடி: நோய்களும் துன்பங்களும் நிறைந்திருக்கும். 45 அடி: புகழும் பொருளும் பெருகும். 46 அடி: வறுமையும் துன்பமும் நிறைந்த வாழ்க்கையாகவே இருக்கும். 47 அடி: கடன் சுமையும் கவலையும் அதிகரிக்கும். 48 அடி: விபத்து, வறுமை, பகைவர்களால் துன்பம் உண்டாகும். 49 அடி: திருடர் பயம் மற்றும் அவமானம் ஏற்படும். 50 அடி: தொடங்கும் காரியங்கள் அப்படியே இருக்கும், தொந்தரவுகளும் அதிகரிக்கும். 51 அடி: துன்பங்களும் தொல்லைகளும் ஏற்படும். 52 அடி: விவசாயத்தினால் இலாபமும் வெற்றியும் கிடைக்கும். 53 அடி: பெண்களால் பிரச்சனைகள் ஏற்படும். 54 அடி: அரசாங்கத்தினால் பிரச்சனைகள் ஏற்படும். 55 அடி: சுற்றத்தாரிடம் பகைமை ஏற்படும். 56 அடி: உங்களுக்கும் உங்கள் தலைமுறைக்கும் நல்லதே நடக்கும். 57 அடி: குடும்பத்தில் குழப்பமும் புத்திரர்களால் வேதனையும் ஏற்படும். 58 அடி: துன்பங்கள், எதிர்பாராத செலவு இழப்பு போன்றவை ஏற்படும். 59 அடி: கவலை குடி கொள்ளும், சேர்த்த பொருள்கள் தீய வழியில் அழியும். 60 அடி: தொட்டதெல்லாம் வெற்றி பெறும் செல்வம் அதிகரிக்கும். 61 அடி: மனதில் கவலை அதிகரிக்கும் வீண் பிரச்சனைகளும் வளரும். 62 அடி: வருத்தமும் வறுமையும் நிலைத்திருக்கும். 63 அடி: பொன் பொருள் அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 64 அடி: அரசாங்கத்தால் உதவியும் புகழும் கிடைக்கும், மகிழ்ச்சி நிலைத்திருக்கும். 65 அடி: இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும். 66 அடி: குழந்தைகளால் மனமகிழ்ச்சியும் குடும்பத்தில் நிம்மதியும் நிலைத்திருக்கும். 67 அடி: தீய சக்திகளினால் தொந்தரவுகள் ஏற்படும். 68 அடி: பொன்பொருள் சேரும் மற்றும் பெரியோர்களின் ஆதரவும் கிடைக்கும். 69 அடி: அவமானங்கள் ஏற்படும் செல்வம் அழியும். 70 அடி: மதிப்பும் மரியாதையும் உயரும். 71 அடி: சமூகத்தில் அந்தஸ்த்து உயரும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும். 72 அடி: பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும் ஆடம்பர வாழ்க்கையும் கிடைக்கும். 73 அடி: தரித்திரம், பொன் பொருள் செலவு அதிகரிக்கும், வம்ச விருத்தியும் தடைப்படும். 74 அடி: அரசு சலுகை, பரிசு, பதவிகள் தேடி வரும். 75 அடி: புகழும் செல்வங்களும் வீழ்ச்சி அடைந்து துன்பங்கள் தொடர் கதையாக இருக்கும். 76 அடி: கொடுமைகள் நிறைந்த வாழ்க்கையாகவே இருக்கும். நண்பர்களாலும் எதிரிகளாலும் தீமையே ஏற்படும். 77 அடி: வண்டி வாகனங்கள் கிடைக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். 78 அடி: பிள்ளைகளால் பிரச்சனை எதிர்காலத்தில் நிம்மதியின்மை போன்றவை ஏற்படும். 79 அடி: கால்நடை வளர்ப்பில் வளர்ச்சி மற்றும் எல்லோராலும் பாராட்டப்படும் நிலையும் உண்டாகும். 80 அடி: பொன் பொருள் சேரும் மற்றும் மகிழ்ச்சி கலந்த வாழ்க்கை அமையும். 81 அடி: விபத்துக்கள் ஏற்படும் மற்றும் தலைமகனுக்கு ஆபத்துக்களும் ஏற்படும். 82 அடி: இயற்கை சீற்றத்தினால் ஆபத்துக்கள் நேரிடும். 83 அடி: வறுமை நிறைந்த வாழ்க்கையாகவே இருக்கும். 84 அடி: எதிர்பாராத உதவிகள் கிடைத்து நன்மைகள் நிறைந்த வாழ்க்கை அமையும். 85 அடி: அரசாங்கத்தால் ஆதரவும் நன்மைகளும் கிடைக்கும். 86 அடி: எப்போதும் துன்பங்களும் தொல்லைகளும் நிறைந்த வாழ்க்கையாகவே இருக்கும். 87 அடி: பிரயாணங்களால் நன்மைகள் ஏற்படும். 88 அடி: இறை அருளால் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். 89 அடி: விருந்து கலந்த முன்னேற்றமான வாழ்க்கை அமையும், நல்ல வாய்ப்புகள் தேடி வரும். 90 அடி: அன்பு, ஆதரவு, செல்வம் அனைத்தும் கலந்த வாழ்க்கை அமையும். 91 அடி: கல்வியினால் நற்செயல்கள் உண்டாகும். 92 அடி: பட்டங்களும் புகழும் தேடி வரும். 93 அடி: அரசு மற்றும் அரசாங்கத்தால் பிரச்சனைகள் ஏற்படும். 94 அடி: தரித்திரம் அமைதியற்ற வாழ்க்கை ஏற்படும். 95 அடி: செல்வ வளம் அதிகரிக்கும் பெரியவர்களுடன் நட்பும் ஏற்படும். 96 அடி: செல்வம் அழியும் திருடர்களால் பிரச்சனைகள் ஏற்படும். 97 அடி: வியாபாரம் விருத்தி அடையும் 98 அடி: எல்லோராலும் நன்மைகளும் சென்ற இடத்தில் சிறப்புகளும் கிடைக்கும். 99 அடி: கற்றோரால் நன்மைகளும் ராஜயோகமும் கிடைக்கும். 100 அடி: தெய்வ அருள் கிடைக்கும் எல்லா செல்வங்களும் பரிபூரணமாக கிடைத்து நன்மை உண்டாகும்.
மனையடி சாஸ்திர நற்பலன்கள் Read More »