Author name: OMVASTHUBAVA

மனையடி சாஸ்திர நற்பலன்கள்

ஒரு அடி என்பது 12 அங்குலங்கள் உடையது ஆகும். சென்டி மீட்டர் கணக்கில் சொன்னால் 1 அடி என்பது 30 செ.மீ ஆகும். இந்த அடி கணக்குகள் ( 100 செ.மீ, 1 மீட்டர், 1000 மீட்டர், 1 கிலோ மீட்டர் ) 1950 – களில் தான் நடைமுறைக்கு வந்தது. 6 அடி: நன்மை தரக்கூடியது, இறைவன் அருள் கிடைக்கும் 7 அடி: தரித்திரம், வறுமை, கடன், நோய் போன்றன அதிகம் துன்புறுத்தும். 8 அடி: நல்ல பாக்கியம், செல்வம், தெய்வ அருள், இன்பம் அனைத்தும் கிடைக்கும். 9 அடி: கஷ்டங்களும் தோல்விகளும் நிறைந்தது. 10 அடி: சிறந்த உணவு, பொன் பொருள் சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும். 11 அடி: தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும், செழிப்பு நிறைந்த வாழ்க்கை அமையும். 12 அடி: புத்திரர் இழப்பு, வறுமை துர்மரணங்கள் நிறைந்தது. 13 அடி: நோய், துயரங்கள், தோல்விகள் நிறைந்தது. 14 அடி: பகை, கவலைகள் நிறைந்தது. 15 அடி: வறுமை, பணக்கஷ்டம், துன்பங்கள் நிறைந்தது. 16 அடி: மகிழ்ச்சி பொங்கும், செல்வம் செழிக்கும். 17 அடி: தொடங்கும் காரியம் வெற்றிகிடைக்கும், எதிரி கூட நண்பன் ஆவான். 18 அடி: திருடர்களால் பொருள் நஷ்டம், மன வேதனை, வீடு அழியக்கூடிய நிலைமை கூட ஏற்படும். 19 அடி: எப்போதும் மன வேதனை, புத்திரர்களால் கவலை, வறுமை இருக்கும். 20 அடி: தொழில் நல்ல வருமானம் கிடைக்கும், சொகுசான வாழ்க்கை அமையும் 21 அடி: தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும், எப்போதும் மகிழ்ச்சி இருக்கும். 22 அடி: சுயகௌரவம் பெருகும், பழி பாவங்கள் விலகும். 23 அடி: நிம்மதி அழியும், தடைகள் ஏற்படும், உறவினர்கள் கூட பகைவர் ஆவர். 24 அடி: தொடங்கிய காரியம் பாதியிலே நிற்கும், சேமிப்பு கரைந்து காலியாகி விடும். 25 அடி: இல்லறத்தில் பிரச்சனைகளும் கஷ்டங்களும் நிறைந்த வாழ்க்கை ஏற்படும். 26 அடி: இன்பங்களும் செல்வங்களும் நிறைந்த நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும். 27 அடி: பெயர், புகழ், பதவி அனைத்தும் கிடைக்கும். 28 அடி: தோல்விகள் விலகி வெற்றி கிடைக்கும், அனைவரும் நட்பு பாராட்டுவார்கள். 29 அடி: விவசாயம் பண்ணை தொழில் உயர்ந்து வாழ்க்கை வளம் பெறும். 30 அடி: அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும், பூர்வீக சொத்து கிடைக்கும், யோகம் உண்டாகும். 31 அடி: பொன் பொருள் சேர்க்கை கிடைக்கும், நல்லவர்கள் நண்பர்களாக கிடைப்பார்கள். 32 அடி: இதுவரை நீங்கள் இழந்தவை திரும்ப கிடைக்கும், எல்லோரையும் ஈர்த்து இழுக்கும் ஆற்றலும் கிடைக்கும். 33 அடி: வருமானம் அதிகரிக்கும், செல்வாக்கும் பெருகும். 34 அடி: இதுவரை சேர்த்து வைத்த பெயரும் புகழும் அழிந்து விடும், தீய பலன்களே நடக்கும். 35 அடி: செல்வ செழிப்பும் செல்வாக்கும் உயரும். 36 அடி: பதவி, புகழ் கிடைக்கும். வீரதீர செயல்களும் செய்வார்கள். 37 அடி: விவசாயம் மற்றும் பண்ணை தொழில் அதிகரிக்கும், வெற்றியும் கிடைக்கும். 38 அடி: எந்த காரியங்கள் தொடங்கினாலும் இடையூறுகளும் குழப்பங்களும் ஏற்படும். 39 அடி: இன்பம், செல்வம், குடும்பத்தில் அமைதியான வாழ்க்கையும் அமையும். 40 அடி: எந்த வேலை தொடங்கினாலும் இடைஞ்சலும் எதிர்ப்பும் அதிகரிக்கும். 41 அடி: பொன் பொருள் அதிகரிக்கும், தொழிலும் சிறப்பாக நடைபெறும். 42 அடி: வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைத்து மகிழ்ச்சியாக வாழலாம். 43 அடி: அனைத்திலும் ஏமாற்றமும் தடைகளுமே கிடைக்கும். 44 அடி: நோய்களும் துன்பங்களும் நிறைந்திருக்கும். 45 அடி: புகழும் பொருளும் பெருகும். 46 அடி: வறுமையும் துன்பமும் நிறைந்த வாழ்க்கையாகவே இருக்கும். 47 அடி: கடன் சுமையும் கவலையும் அதிகரிக்கும். 48 அடி: விபத்து, வறுமை, பகைவர்களால் துன்பம் உண்டாகும். 49 அடி: திருடர் பயம் மற்றும் அவமானம் ஏற்படும். 50 அடி: தொடங்கும் காரியங்கள் அப்படியே இருக்கும், தொந்தரவுகளும் அதிகரிக்கும். 51 அடி: துன்பங்களும் தொல்லைகளும் ஏற்படும். 52 அடி: விவசாயத்தினால் இலாபமும் வெற்றியும் கிடைக்கும். 53 அடி: பெண்களால் பிரச்சனைகள் ஏற்படும். 54 அடி: அரசாங்கத்தினால் பிரச்சனைகள் ஏற்படும். 55 அடி: சுற்றத்தாரிடம் பகைமை ஏற்படும். 56 அடி: உங்களுக்கும் உங்கள் தலைமுறைக்கும் நல்லதே நடக்கும். 57 அடி: குடும்பத்தில் குழப்பமும் புத்திரர்களால் வேதனையும் ஏற்படும். 58 அடி: துன்பங்கள், எதிர்பாராத செலவு இழப்பு போன்றவை ஏற்படும். 59 அடி: கவலை குடி கொள்ளும், சேர்த்த பொருள்கள் தீய வழியில் அழியும். 60 அடி: தொட்டதெல்லாம் வெற்றி பெறும் செல்வம் அதிகரிக்கும். 61 அடி: மனதில் கவலை அதிகரிக்கும் வீண் பிரச்சனைகளும் வளரும். 62 அடி: வருத்தமும் வறுமையும் நிலைத்திருக்கும். 63 அடி: பொன் பொருள் அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 64 அடி: அரசாங்கத்தால் உதவியும் புகழும் கிடைக்கும், மகிழ்ச்சி நிலைத்திருக்கும். 65 அடி: இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும். 66 அடி: குழந்தைகளால் மனமகிழ்ச்சியும் குடும்பத்தில் நிம்மதியும் நிலைத்திருக்கும். 67 அடி: தீய சக்திகளினால் தொந்தரவுகள் ஏற்படும். 68 அடி: பொன்பொருள் சேரும் மற்றும் பெரியோர்களின் ஆதரவும் கிடைக்கும். 69 அடி: அவமானங்கள் ஏற்படும் செல்வம் அழியும். 70 அடி: மதிப்பும் மரியாதையும் உயரும். 71 அடி: சமூகத்தில் அந்தஸ்த்து உயரும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும். 72 அடி: பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும் ஆடம்பர வாழ்க்கையும் கிடைக்கும். 73 அடி: தரித்திரம், பொன் பொருள் செலவு அதிகரிக்கும், வம்ச விருத்தியும் தடைப்படும். 74 அடி: அரசு சலுகை, பரிசு, பதவிகள் தேடி வரும். 75 அடி: புகழும் செல்வங்களும் வீழ்ச்சி அடைந்து துன்பங்கள் தொடர் கதையாக இருக்கும். 76 அடி: கொடுமைகள் நிறைந்த வாழ்க்கையாகவே இருக்கும். நண்பர்களாலும் எதிரிகளாலும் தீமையே ஏற்படும். 77 அடி: வண்டி வாகனங்கள் கிடைக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். 78 அடி: பிள்ளைகளால் பிரச்சனை எதிர்காலத்தில் நிம்மதியின்மை போன்றவை ஏற்படும். 79 அடி: கால்நடை வளர்ப்பில் வளர்ச்சி மற்றும் எல்லோராலும் பாராட்டப்படும் நிலையும் உண்டாகும். 80 அடி: பொன் பொருள் சேரும் மற்றும் மகிழ்ச்சி கலந்த வாழ்க்கை அமையும். 81 அடி: விபத்துக்கள் ஏற்படும் மற்றும் தலைமகனுக்கு ஆபத்துக்களும் ஏற்படும். 82 அடி: இயற்கை சீற்றத்தினால் ஆபத்துக்கள் நேரிடும். 83 அடி: வறுமை நிறைந்த வாழ்க்கையாகவே இருக்கும். 84 அடி: எதிர்பாராத உதவிகள் கிடைத்து நன்மைகள் நிறைந்த வாழ்க்கை அமையும். 85 அடி: அரசாங்கத்தால் ஆதரவும் நன்மைகளும் கிடைக்கும். 86 அடி: எப்போதும் துன்பங்களும் தொல்லைகளும் நிறைந்த வாழ்க்கையாகவே இருக்கும். 87 அடி: பிரயாணங்களால் நன்மைகள் ஏற்படும். 88 அடி: இறை அருளால் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். 89 அடி: விருந்து கலந்த முன்னேற்றமான வாழ்க்கை அமையும், நல்ல வாய்ப்புகள் தேடி வரும். 90 அடி: அன்பு, ஆதரவு, செல்வம் அனைத்தும் கலந்த வாழ்க்கை அமையும். 91 அடி: கல்வியினால் நற்செயல்கள் உண்டாகும். 92 அடி: பட்டங்களும் புகழும் தேடி வரும். 93 அடி: அரசு மற்றும் அரசாங்கத்தால் பிரச்சனைகள் ஏற்படும். 94 அடி: தரித்திரம் அமைதியற்ற வாழ்க்கை ஏற்படும். 95 அடி: செல்வ வளம் அதிகரிக்கும் பெரியவர்களுடன் நட்பும் ஏற்படும். 96 அடி: செல்வம் அழியும் திருடர்களால் பிரச்சனைகள் ஏற்படும். 97 அடி: வியாபாரம் விருத்தி அடையும் 98 அடி: எல்லோராலும் நன்மைகளும் சென்ற இடத்தில் சிறப்புகளும் கிடைக்கும். 99 அடி: கற்றோரால் நன்மைகளும் ராஜயோகமும் கிடைக்கும். 100 அடி: தெய்வ அருள் கிடைக்கும் எல்லா செல்வங்களும் பரிபூரணமாக கிடைத்து நன்மை உண்டாகும்.

மனையடி சாஸ்திர நற்பலன்கள் Read More »

வாஸ்து சாஸ்திரத்தின் தொழில் நுட்பம்

நவீன உலகில் பலர் நம்ப விரும்புவதால் வாஸ்து ஒரு கட்டுக்கதை அல்லது மூடநம்பிக்கை அல்ல. அரண்மனைகள் அல்லது மிதமான வீடுகள் மற்றும் வேலை இடங்கள் போன்ற கட்டிடங்களை வடிவமைப்பதற்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒரு விஞ்ஞானம் வாஸ்து. பண்டைய காவியமான மகாபாரதம் லட்சகிரக (மெழுகு அரண்மனை) கட்டுமானத்தில் விஸ்வகர்மா மற்றும் அவரது கட்டிடக்கலை அறிவியலையும் குறிக்கிறது. வீடு மற்றும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக இயற்கையின் ஆற்றல்களைப் பயன்படுத்துவதில் கட்டுமானத்தின் அடிப்படைகளை வாஸ்து வழங்குகிறது. வாஸ்து சாஸ்திரம் பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் வானகம் ஆகிய ஐந்து அடிப்படை கூறுகளை, விஞ்ஞான ரீதியாக இணைத்து ஒரு இனிமையான அமைப்பை உருவாக்குவதற்கான கருத்தை அடிப்படையாகக் கொண்டது. கட்டிடக்கலையுடன் ஒருங்கிணைந்த வாஸ்து கொள்கைகள் ஆரோக்கியம், செல்வம், ஆற்றல் மற்றும் செழிப்பு ஆகியவற்றை உயர்த்துவதோடு, வாழ்க்கை அல்லது வேலை செய்யும் சூழ்நிலையை அமைதியாகவும் அறிவொளியாகவும் ஆக்குகின்றன. ஸ்கை (மேற்கு) விரிவாக்கங்கள் மற்றும் மேம்பாடுகளைக் குறிக்கிறது, வாயு (கிழக்கு, வடகிழக்கு) மகிழ்ச்சியும், அக்னி (தெற்கு) சக்தி மற்றும் புகழ், நீர் (வடக்கு) ஆன்மீகம் மற்றும் சிகிச்சை முறை, பூமி (மையம்) அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான இருக்கிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் தொழில் நுட்பம் Read More »

வாஸ்து புருஷ மண்டலமும், வாஸ்து புருஷனும்

வாஸ்து புருஷ மண்டலம் : கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்க வேண்டிய இடம் என்பவற்றை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து மண்டலம் ஆகும்,வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்கு பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இம்மண்டலத்தின் மையப் பகுதிக்கு வேதகால முழுமுதற் கடவுளான பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து புருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை, இதனால் இப்பகுதி பிரமஸ்தானம் எனப்படுகிறது. இம்மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன. வாஸ்து புருஷன் : இந்து தத்துவங்களின் படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் உருவகப்படுகின்றது.

வாஸ்து புருஷ மண்டலமும், வாஸ்து புருஷனும் Read More »

7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது…!

மனிதர்கள் இயங்குவதற்கு ஆதாரமாக 7 ஆற்றல் சக்கரங்கள் உள்ளன. சூரிய ஒளியோடு தொடர்புடைய இந்த 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கண்டறிந்துள்ளனர். அவை 1. மூலாதாரம், 2. சுவாதிஷ்டானம், 3. மணிபூரகம், 4.  அனாகதம், 5. விசுத்தி, 6. ஆக்கினை, 7. தூரியம் ஆகியவை ஆகும்.  மூலாதாரம்: முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம்.  அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது. உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல  காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது. சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம்  தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சுவாதிஷ்டானம்: இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே ஆறு இதழ் தாமரை போல் ஆரஞ்சு நிறத்தில்  அமைந்துள்ளது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஈகோவுக்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது.  மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை அடக்கி அறிகின்ற சக்தியும் இதிலிருந்து தொடர்கிறது. பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள்  இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மணிபூரகம்: நாபி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும்  விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய  உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன. கணையம் என்கிற சுரப்பி  இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. மண்ணீரல், இரைப்பை, கல்லீரல், பித்தப்பை, ஆகியவை இதன்  கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன. அனாகதம்: இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் பன்னிரண்டு இதழ்  தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் இருக்கிறது. அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து  நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும். தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இதயம், நுரையீரல், ரத்த ஓட்டம் ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன. விசுத்தி: இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. இது பதினாறு இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில்  இருக்கிறது. தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில்  செயல்படுகின்றன. ஆக்கினை: இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் (டெலிபதி) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன்  மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான்  விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மிகக் கண் திறப்பதாக ஞானிகள்  சொல்கிறார்கள். பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு,  காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை. தூரியம்: இதற்கு சகஸ்ரஹாரம், தாமரைச் சக்கரம் என்ற பெயர்கள் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கிறது. இந்தச் சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப்  பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும், நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என,  அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன்  கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது…! Read More »

வாஸ்து தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன தெரியுமா?

வீட்டில் எப்போதும் பிரச்சனையாக இருப்பதற்கு காரணம் வீட்டின் வாஸ்துதோஷமாக இருக்கலாம். அதற்குரிய எளிய பரிகாரம் செய்து பலன்  பெறுங்கள். பூஜைகளின் மூலம் வாஸ்து தோஷங்களை நீக்கலாம். அதற்காகப் பெரிய சிரமங்கள் எதுவும் படத் தேவையில்லை.  வீட்டில் தினமும் ஊதுவர்த்தி காட்டி சாமி படங்களுக்கு பூஜை செய்து வந்தாலே போதும். வீட்டில் எந்த கெட்ட சக்தியும் அண்டாது. தினமும்  காலையில் கிழக்கு நோக்கி தீபமேற்றி, ‘ஓம் நமோ வாஸ்து புருஷாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை ஜபியுங்கள். செவ்வாய், வெள்ளிக் கிழமை மாலையில் வீடு முழுவதும் சாம்பிராணி புகை கூழ, ஓம் என்னும் பிரணவ மந்திரம், கந்தசஷ்டிக் கவசம்,  சிவபுராணம், லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், காயத்ரி மந்திரம் போன்ற ஸ்லோகங்கள் ஒலிப்பது நல்லது.  வீட்டின் வடகிழக்கில் துளசி, நந்தியாவட்டை போன்ற பூச்செடிகள் வளர்க்கலாம். ஆண்டுக்கொரு முறை கணபதி ஹோமம் நடத்தினால்  நல்லது. வெள்ளிக்கிழமையில் துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றலாம். தினமும் மாலை நேரங்களில் கட்டாயமாக வீடுகளில் விளக்கேற்றி வைக்க வேண்டும். குறிப்பாக, தண்ணீர் தொட்டி இருக்கும் இடத்துக்கு  அருகே விளக்கேற்றி வைத்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் நீங்கும். 

வாஸ்து தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன தெரியுமா? Read More »

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

பஞ்சபூதங்களில் ஒன்றான \”நிலம்\” மனிதன் வாழ்வின் இருப்பிடமாக கருதப்படுகின்றது. வாஸ்துவில் தென்மேற்கு மூலையே நிலத்திற்கு ஒப்பிட்டு கூறப்படும். இந்த மூலையை \”நைருதி மூலை/குபேர மூலை\” என்றும் கூறுவர்.  தென்மேற்கு மூலையே ஒரு இடத்தின் ஆற்றல் களமாக கருதப்படுகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு கட்டடத்தின் தென்மேற்கு பகுதியில் வாசலோ அல்லது எந்த ஒரு திறப்போ அமைக்ககூடாது.   அடிப்படையில் நாம் வாழும் பூமியானது நேராக இல்லாமல் தன் அச்சிலிருந்து 23.5 டிகிரி கிழக்காக சாய்ந்துள்ளது. பூமி இப்படி இருப்பதால் தான் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வரமுடிகிறது.   மேலும் பூமி, சூரியனை சுற்றிச் செல்லும்போது, பூமியின் மேற்பரப்பில் ஈசான்ய பகுதி சற்று தாழ்ந்தும், தென்மேற்கு பகுதி உயர்ந்தும் உள்ளதால் தான், நாம் நம் வீட்டினை அமைக்கும்போது தென்மேற்கு மூலையை உயரமாகவும், வடகிழக்கு மூலையை பள்ளமாகவும் வைத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது.

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை! Read More »

error: Content is protected !!
Scroll to Top