புதிதாக வீடு கட்டுபவர்கள் படிக்கட்டு மற்றும் முதல் தூண் அமைக்கும் முறை

முதல் படிக்கட்டில் விநாயகரை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். முதல் படிக்கட்டில் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து மஞ்சளால் பிள்ளையார் சுழி போட்டு கொள்ளுங்கள். அதற்கு கீழே லாபம் என்று எழுதிக் கொள்ளுங்கள். முதல் நான்கு படிகளுக்கும் இருபுறமும் பூக்களை வையுங்கள். இதை படி பூஜை என்பார்கள். இந்த பூஜையைச் செய்துவிட்டு ஒவ்வொரு படிக்கட்டாக உரிமையாளர் ஏறி செல்ல வேண்டும். இரண்டாவது படிக்கட்டில் பராசக்தியை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். திரிசூலம் வரைந்து ஓம் சக்தி என்கிற மந்திரத்தை குங்குமத்தால் எழுதுங்கள். மூன்றாவது படிக்கட்டில் ஈசனை நினைத்து விபூதியால் பட்டை தீட்டுங்கள். சிவாய நம என்ற மந்திரத்தை எழுதுங்கள். நான்காவது படிக்கட்டில் பெருமாளை நினைத்து கொள்ளுங்கள். திருநாமம் வரைந்து கொள்ளுங்கள். முதல் நான்கு படிக்கட்டுகளில் இவ்வாறு செய்து பின்னர் ஊதுபத்தி ஏற்றி வைத்து கற்பூர ஆரத்தி காண்பியுங்கள். அதன் பிறகு இவற்றை மிதிக்காமல் ஒவ்வொரு படியாக ஏறி மேலே செல்லுங்கள். இவ்வழியாக படி பூஜை உரிமையாளர் செய்யும் பொழுது வாழ்வில் இறக்கங்களை சந்திக்காமல் ஒவ்வொரு படியாக ஏறி கொண்டே செல்வார்கள் என்பது வழக்கம்.

error: Content is protected !!
Scroll to Top