வாஸ்து தோஷம்

பொதுவாக ஒரு வீட்டில் வடகிழக்கு மூலையில் பசுமையான நிறத்தில் உள்ள படங்களோ அல்லது ஒரு சிறிய தொட்டியில் செடி போன்றவை வைத்தாலே வாஸ்து பிரச்சனைகள் சரியாகி விடும் என்பது ஐதீகம். அது மட்டுமின்றி தேவகனி என்று சொல்லப்படும் எலுமிச்சை மரத்தை வீட்டில் நட்டு வளர்க்கும் போது எந்தவிதமான வாஸ்து பிரச்சனைகளும் வராமல் தடுக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போதும் இந்த வாஸ்துவுக்கு நாம் பரிகாரம் செய்ய தேவையான பொருள் எலுமிச்சை பழம் தான். ஏழு எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டின் நான்கு மூலையிலும் ஏழு எலுமிச்சை பழத்தையும் ஒவ்வொன்றாக சுற்ற வேண்டும். அப்படி பார்க்கும் போது ஒவ்வொரு மூலையிலும் நாம் ஏழு முறை எலுமிச்சை பழத்தை வைத்து சுற்றுவோம். அதன் பிறகு இந்த எலுமிச்சை பழங்கள் அனைத்தையும் வீட்டிற்கு வெளியில் கொண்டு வந்து அதை இரண்டு பாதியாக நறுக்க வேண்டும். இப்படி நறுக்கிய இந்த எலுமிச்சை பழ துண்டுகளை வீட்டிற்கு வெளியே சென்று சமமாக பிரித்து நான்கு மூலையிலும் தூக்கி எறிந்து விடுங்கள். அதன் பிறகு உங்கள் கை கால்களை சுத்தம் செய்து கொண்டு வீட்டிற்குள் வந்து விடுங்கள். இந்த பரிகாரத்தை ஒரு முறை செய்தாலே போதும். இதே போல் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஒரே ஒரு எலுமிச்சை பழத்தை மட்டும் எடுத்து பாதியாக அரிந்து அதன் சாறை மட்டும் நான்கு மூலைகளில் லேசாக பிழிந்து விட்டு, அந்த எலுமிச்சை பழத்தை வெளியில் தூக்கி போட்டு விடுங்கள். இதை வாரம் வாரம் சனிக்கிழமை செய்து வரலாம். இப்படி செய்யும் பொழுது வீட்டில் வாஸ்து சம்பந்தமான எந்த குறைபாடும் வரவே வராது. அது மட்டும் இன்றி வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் கூட இதன் மூலம் சரியாகி விடும் என்றும் சொல்லப்படுகிறது.
பொதுவாகவே எலுமிச்சை பழத்துக்கு தீயவை எடுத்துக் கொண்டு நல்லவற்றை நமக்கு கொடுக்கக்கூடிய ஆற்றல் உண்டு. அதனால் தான் அது கனிகளிலேயே மிகவும் அற்புதமான பலனை பெற்று இருக்கிறது. முன் காலங்களில் எல்லாம் பெரும்பாலும் அனைவர் வீட்டிலிம் இந்த எலுமிச்சை மரம் நட்டு வைத்திருந்தார்கள் அவர்கள் இந்த வாஸ்து குறித்து வைத்திருந்தார்களா என்று தெரியாது ஆனால் அந்த பிரச்சனைகள் அவர்களுக்கு வராமல் இருக்க இவையெல்லாம் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

error: Content is protected !!
Scroll to Top